அன்பாசிரியர் 2021 விருது
‘அன்பாசிரியர் 2021’ விருதுகளை ‘ராம்ராஜ்’ காட்டனுடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்கப் பெருமையுடன் காத்திருக்கிறது. உடன் கொண்டாடுபவர்கள் லட்சுமி செராமிக்ஸ் மற்றும் சங்கர் ஐஏஎஸ் அகாடமி.
தபால் / இணையதளம் வழியே விண்ணப்பிக்கலாம்.
மாணவர்களுக்கு தனித்துவமான கல்வியை அளிப்பதோடு நின்று விடாமல், திறன் வளர்ப்பு, சமூக அக்கறை, நற்பண்புகளை ஊட்டி வளர்த்து, பள்ளியையும் மேம்படுத்தும் ஆசிரியர்கள் பலர். அந்த நல்லடையாள ஆசிரியர்களை ‘அன்பாசிரியர்’ என்ற விருதோடு கவுரவிக்க பெருமையுடன் காத்திருக்கிறது ‘இந்து தமிழ் திசை’.
‘இந்து தமிழ் திசை’ நாளிதழும் தமிழக பள்ளிக் கல்வித் துறையும் இணைந்து, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப் பள்ளி ஆசிரியர்களில் மாணவர்கள் மீது பேரன்பும் அவர்களின் வளர்ச்சி குறித்த அக்கறையும் கொண்ட அதிசிறந்த ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ‘அன்பாசிரியர் 2020’ விருது முதன்முதலில் 2020-ல் வழங்கப்பட்டது. இதுதவிர முன்னோடி அன்பாசிரியர்கள் என்ற அடைப்பிடையில் எழுதப்பட்ட ‘அன்பாசிரியர்’ புத்தக வெளியீடும் நடைபெற்றது. இந்த புத்தகத்தின் நாயகர்களான முன்னோடி அன்பாசிரியர்கள் 50 பேருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. இதை அடுத்து ’இந்து தமிழ் திசை’ அன்பாசிரியர்களில் சிலருக்கு தேசிய நல்லாசிரியர் விருதும் கிடைத்தது என்பது கூடுதல் மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.
இதன் அடுத்தக்கட்டமாக, கரோனா பெருந்தொற்று காலத்தையும் தங்களது இடைவிடாத ஈடுபாட்டின் வழியாக கடந்து மாணவர்களுக்கு அன்பும் அறிவும் ஊட்டிவரும் அர்ப்பணிப்புமிக்க தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சேர்ந்த ஆசிரியர்களை கவுரவிக்கும் நேரம் வந்துவிட்டது. ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘அன்பாசிரியர் 2021’ விருது வழங்க பெருமையுடன் காத்திருக்கிறது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்கள்.
. தொடர்ச்சியாகக் கற்பித்து வரும் தலைமை ஆசிரியர்களும் விருதுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
. *‘அன்பாசிரியர் 2020’ விருதாளர்கள் தயவுகூர்ந்து விண்ணப்பிக்க வேண்டாம்.
என்ன செய்ய வேண்டும்?
அன்பாசிரியர் தேர்வு முறை
. விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்ட பிறகு, தமிழகம் முழுவதும் நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்படும்.
. தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி ஆகிய பகுதிகளில் உள்ள ‘இந்து தமிழ்திசை’ அலுவலத்தில் முதல் கட்ட நேர்காணல் விரைவில் நடைபெறும். ஆசிரியர்கள், அவர்களின் மண்டலத்துக்கு ஏற்றபடி மேற்கண்ட நான்கு நகரங்களில் ஒன்றுக்கு நேரில் வர வேண்டியிருக்கும்.
. நேர்காணலுக்கு தன்னிடமுள்ள புகைப்படங்கள், வீடியோக்கள், பிற விவரங்களை ஆசிரியர்கள் எடுத்து வரவேண்டும்.
. மண்டல அளவில் தேர்வாகும் ஆசிரியர்களுக்கு, மூத்த கல்வியாளர்கள் மூலம் இறுதிகட்ட நேர்காணல் நடத்தப்படும்.
. மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் 38 பேருக்கு ‘அன்பாசிரியர்’ விருது வழங்கப்படும்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 23 மார்ச் 2022
இணையம் வழியில் விண்ணப்பிப்பதற்கான முகவரி
https://www.htamil.org/00217 அல்லது அருகில் உள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்தும் விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் தகவல்களுக்கு: மு.முருகேசன் - 9444 360 421
இணையம் வழியே அனுப்ப முடியாதவர்கள், இந்த லிங்கில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
Registration form download - Download registration form - click here